மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2019-07-21 22:30 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் வளர்த்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சேகர் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன், இயற்பியல் துறைத்தலைவர் பாஸ்கரன் ஆகியோர் மழைநீர் சேகரிப்பின் அவசியம், மரம் வளர்த்தலின் அவசியம், நீர் மேலாண்மை குறித்து விளக்கிப்பேசினார்கள். முகாமில் துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் அன்பழகன் வரவேற்று பேசினார். முடிவில் ஆங்கில துறைத்தலைவர் மூர்த்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்