மதுராந்தகத்தில் கணவன், மனைவியை கத்தியால் வெட்டி 7 பவுன் நகை பறிப்பு

மதுராந்தகத்தில் கணவன், மனைவியை கத்தியால் வெட்டி 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.

Update: 2019-07-30 22:45 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மேலவலம்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). எலெக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இவர் தனது தந்தை, மனைவி ஜெகதா, மகள்கள் வினோதினி, மாசினி ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்மநபர்கள் 4 பேர் கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களிடம் பணம், நகை கேட்டு அவர்களை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் சீனிவாசனுக்கு தலை, கழுத்து மற்றும் கை அவரது மனைவி ஜெகதாவுக்கு கையில் வெட்டு விழுந்தது.

பின்னர் கொள்ளையர்கள் ஜெகதா அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டனர்.

பின்னர் அனைவரையும் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து சீனிவாசன் மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்