சிறு, குறு விவசாயிகளுக்கு, புதிய ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1 லட்சம் கடன் உதவி - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்

சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-18 22:45 GMT
நாமக்கல்,

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 5 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, பாசன வசதி ஏற்படுத்தி கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் பயன்பெற விரும்புவோர் விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் சாதிச்சான்று, வருமான சான்று மற்றும் இருப்பிட சான்று இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்க வேண்டும்.

தகுதிஉடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்