பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டம்

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-20 23:00 GMT
திருவாரூர்,

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர் பணியிடங்களை ஏற்படுத்த வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அனைத்து அரசு டாக்டர்களின் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லெனின் தலைமை தாங்கினார்.

அரசு டாக்டர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பில் தமிழக அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் டாக்டர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்