திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பழைய குட்ஷெட் பகுதியை ஆம்னி பஸ் நிறுத்தமாக மாற்ற பரிசீலனை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பழைய குட்ஷெட் பகுதியை ஆம்னி பஸ் நிறுத்தமாக மாற்ற பரிசீலனை செய்யப்படுகிறது.

Update: 2019-09-07 21:59 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தினமும் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நின்று செல்கின்றன. இதன்மூலம் 5 ஆரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், தினமும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ரெயில் பயணிகள், பஸ்நிலையம் செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டது. அதன்படி பழைய குட்ஷெட் பகுதியில் ரெயில்வே அதிகாரிகளுக்கு அலுவலகங்கள், ரெயில்வே போலீஸ் நிலையம், உணவகம் போன்றவை கட்டப்பட உள்ளது. இதற்காக அங்கு தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், கட்டிடங் கள் எதையும் கட்டவில்லை. இதனால் சில பகுதிகள் முட்செடிகள் முளைத்து காடு போன்று காட்சி அளிக்கிறது.

அதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் அங்கு பதுங்கி கொள்வது வழக்கமாக உள்ளது. இது பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்கும் வகையில், ரெயில்வே பழைய குட்ஷெட் பகுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வர ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி பழைய குட்ஷெட் பகுதியை ஆம்னி பஸ் நிறுத்தமாக மாற்றுவதற்கு, அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகின்றனர். இதற் காக தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. இந்த இடத்தில் சுமார் 20 பஸ்கள் வரை நிறுத்தலாம். திண்டுக் கல்லில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங் களுக்கு ஆம்னி பஸ்கள் இயக் கப்படுகின்றன.

அதன்படி ரெயில் நிலையத்தின் அருகில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டால், ரெயிலில் இடம் கிடைக்காத மக்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். மேலும் ரெயில்வே நிர்வாகத்துக்கும் வருவாய் கிடைக்கும்.

மேலும் செய்திகள்