ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

வாழவச்சனூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-08 22:15 GMT
வாணாபுரம், 

திருவண்ணாமலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் துளசிலிங்கம் (வயது 33). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி இந்திரா என்ற மனைவியும் 1 வயது கைக்குழந்தையும் உள்ளது. மேலும் இந்திரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு துளசிலிங்கம் திருவண்ணாமலையில் இருந்து சவாரிக்காக வாழவச்சனூர் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து திருவண்ணாமலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

பெருந்துறைபட்டு மின்சார அலுவலகம் அருகே திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்த துளசிலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வாணாபுரம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் துளசிலிங்கத்தின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்