ஆலங்குளம் அருகே, வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பரிதாப சாவு

ஆலங்குளம் அருகே வேன்- மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-09-09 22:45 GMT
பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் சாமுவேல். அவருடைய மகன் ஐசக் சியாம் (வயது 20). இவர் ஆலங்குளத்தை அடுத்துள்ள அத்தியூத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை ஐசக் சியாம் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். நெல்லை- தென்காசி ரோட்டில் அத்தியூத்து அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த தனியார் பள்ளிக்கூட வேன் எதிர்பாராதவிதமாக ஐசக் சியாம் மீது பயங்கரமாக மோதியது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் மோதி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்