ஏரல் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு

ஏரல் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-09-12 22:00 GMT
ஏரல், 

ஏரல் அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

ஏரல் போலீசார் நேற்று முன்தினம் இரவில் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏரல் அருகே சிவகளை பரும்பு ஊர் சங்க கட்டிடம் முன்பு நின்ற சிலரை வீடுகளுக்கு செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதற்கிடையே போலீசார் தங்களை அவதூறாக பேசியதாகவும், பொய் வழக்கு போடுவதாக மிரட்டியதாகவும் கூறி, நேற்று காலையில் சிவகளை பரும்பு கிராம மக்கள் அங்குள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிவகளை-ஸ்ரீவைகுண்டம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, தாசில்தார் அற்புதமணி, வருவாய் ஆய்வாளர் சக்கரவர்த்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், ராமசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்