மதுகுடித்ததை மகன் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

தென்தாமரைகுளம் அருகே மதுகுடித்ததை மகன் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-10-12 23:15 GMT
தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகேசித்தன் குடியிருப்பைேசர்ந்தவர் குமரேசன் (வயது 49). தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மகன் கல்லூரியில் படித்து வருகிறார்.

குமரேசனுக்குமதுகுடிக்கும்பழக்கம் இருந்துள்ளது. இதனை மறப்பதற்காக கடந்த இரண்டு மாதங்களாகஅவர்சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம்இரவு மீண்டும்மதுகுடித்துள்ளார்.

தற்கொலை

இதனைஅறிந்த அவருடையமகன் கண்டித்ததாக தெரிகிறது.இதனால்மனமுடைந்தகுமரேசன் வீட்டின் அருகில் உள்ள தோப்பில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்றுகாலை அப்பகுதியில் சென்றவர்கள்,குமரேசன் மரத்தில்பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து குமரேசனின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.மேலும்இந்த சம்பவம் குறித்து போலீசார்வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.மதுகுடித்ததை மகன் கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்