திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை; கோர்ட்டு தீர்ப்பு

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-10-19 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 60). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் குமரானந்தபுரத்தை சேர்ந்த முபாரக் அலி உள்பட பலர் ஏலச்சீட்டுக்கு பணம் கட்டி வந்துள்ளனர். மொத்தம் ரூ.9 லட்சம் முதிர்வு தொகையை கொடுக்காமல் குமார் இருந்துள்ளார்.

இதுகுறித்து கடந்த ஆண்டு திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், உரிமம் பெறாமல் ஏலச்சீட்டு நடத்தியது, மோசடி செய்தது ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஏலச்சீட்டு நடத்தி பணம் கொடுக்காமல் மோசடி செய்த குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்