ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் பிரிவு பாதையில் கயர்லாபாத் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2019-11-02 22:30 GMT
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி தேளூர் பிரிவு பாதையில் கயர்லாபாத் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் முன்னிலை வகித்தார். முகாமில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்லக்கூடாது. குடித்து வாகனம் ஓட்டக் கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

மேலும் செய்திகள்