சரவணம்பட்டியில் துணிகரம் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

கோவை சரவணம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-11-02 23:00 GMT
சரவணம்பட்டி,

கோவையை அடுத்த சரவணம்பட்டி நேரு நகர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 54). இவர் சத்தியமங்கலம் அதிவிரைவுப்படை சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி, மகன் பிரதீப் ஆகியோர் சரவணம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு லோகேஸ்வரியும், பிரதீப்பும் வீட்டை பூட்டிவிட்டு காந்திபுரத்திற்கு சென்றுவிட்டு பகல் 1 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

10 பவுன் நகை திருட்டு

அப்போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பொருட் கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 2 செயின், கம்மல் உள்பட 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு லோகேஸ்வரி தகவல் கொடுத்தார்.இதையடுத்து, போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அதனைதொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த நிலையில்அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை சரவணம்பட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 10 பவுன் நகையை திருடிசென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்