பூந்தமல்லி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு

பூந்தமல்லி அருகே வீடு புகுந்து 17 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2019-11-05 22:15 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை, வரதராஜபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 40). டிபன் கடைக்காரர். இவரது மனைவி பொன்னி. நேற்று முன்தினம் ரவி அருகில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டார். வீட்டில் பொன்னி மட்டும் தனியாக இருந்ததால் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு ரவி இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

நகை திருட்டு

விசாரணையில், வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் இருந்த 17 பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்