தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயற்சி போலீசார் விசாரணை

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-12 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் வடிவேலு (வயது 37). தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

வடிவேலு குடும்பத்தினருக்கும் உறவினர் ஒருவரின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது வடிவேலு குடும்பத்தினர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் வடிவேலு, அவருடைய தாயார் காந்தா, மனைவி நதியா ,மகன், மகள் ஆகிய 5 பேர் தர்மபுரி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்