சேலம் அருகே இளம்பெண் கொலை: கணவரின் நண்பர்கள் 4 பேர் கைது

சேலம் அருகே இளம்பெண் கொலையில் கணவரின் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-11-15 23:00 GMT
சேலம்,

சேலம் அருகே வீராணம் மன்னார்பாளையம் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 26). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மோகனேஸ்வரி (21). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கோவையில் வசித்து வந்த இவர்களுக்கு சிபு (3) என்ற மகன் உள்ளான். கோபிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் தினமும் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு தனது மகனுடன் மோகனேஸ்வரி, சேலம் அருகே மன்னார்பாளையம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இருப்பினும் அவரை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு கோபி பலமுறை அழைத்தும் அவர் செல்ல மறுத்துவிட்டார். இந்தநிலையில், கடந்த 10-ந் தேதி அல்லிக்குட்டையில் முட்புதருக்குள் மோகனேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இக்கொலையில் மோகனேஸ்வரியின் கணவர் கோபி ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, கோவை கோர்ட்டில் கோபி சரண் அடைந்தார். இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, மனைவியை கொலை செய்ய கோபிக்கு அவரது நண்பர்கள் 4 பேர் உதவி செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கோபியின் நண்பர் களான அல்லிக்குட்டை போயர் தெருவை சேர்ந்த மெக்கானிக் விஜி (23), ஆட்டோ டிரைவர் காளியப்பன் (24), கட்டிட மேஸ்திரி வீரங்கன் (23), மோகன் (24) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள், கோபியின் மனைவியை கொலை செய்ததற்கான காரணத்தை போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்