முந்திரி தோப்பில் அழுகிய நிலையில் பெண் பிணம் போலீசார் விசாரணை

பண்ருட்டி அருகே அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-23 23:00 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பத்தில் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

விசாரணையில் அவர் பண்ருட்டி அடுத்த சொரத்தூர் கிராமத்தை சேர்ந்த ராயர் மனைவி சந்திரா(வயது 59) என்பது தெரியவந்தது. மேலும் இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி முந்திரி தோப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்