2 மாத சம்பளம் வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2 மாத சம்பளத்தை வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-12-04 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள், தங்களது சம்பள பாக்கியை வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே 2 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷம்

ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் லட்சுமணபெருமாள் தலைமை தாங்கினார். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம், செல்வராஜ், ராஜூவ், ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்