காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை கொண்டார்.

Update: 2020-01-02 22:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாரணை கிராமம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் முனுசாமி (வயது 80). இவர் நீண்ட காலமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததார் இந்த நிலையில் மனமுடைந்த முனுசாமி சம்பவத்தன்று பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்