ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பாலங்குளம் பகுதியில் நேற்று காலையில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து அந்த பகுதியினர் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மிடில் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 50), தொழிலாளி என்பது தெரிய வந்தது. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.
தவறி விழுந்தார்
ரமேஷ் சொந்த ஊருக்கு செல்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ரெயிலில் புறப்பட்டார். அவர் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓடும் ரெயிலில் இருந்து தவறி வெளியே விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரமேசின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பாலங்குளம் பகுதியில் நேற்று காலையில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து அந்த பகுதியினர் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மிடில் தெருவை சேர்ந்த ரமேஷ் (வயது 50), தொழிலாளி என்பது தெரிய வந்தது. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார்.
தவறி விழுந்தார்
ரமேஷ் சொந்த ஊருக்கு செல்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ரெயிலில் புறப்பட்டார். அவர் ரெயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓடும் ரெயிலில் இருந்து தவறி வெளியே விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரமேசின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.