சங்கராபுரம் அருகே, வி‌‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

சங்கராபுரம் அருகே தொழிலாளி வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-11 22:30 GMT
சங்கராபுரம் 

சங்கராபுரம் அருகே உள்ள சே‌‌ஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மகன் நடராஜன்(வயது 45). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த நடராஜன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வி‌‌ஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நடராஜனின் மனைவி வெண்ணிலா சங்கராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்