வேப்பூர் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை

வேப்பூர் அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-12 22:30 GMT
கடலூர்,

வேப்பூர் அருகே மா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் சூரியா (வயது 25) நெல் அறுவடை எந்திர டிரைவர். இவர் தனது தந்தை செல்வராஜிடம் தனக்கு சொந்தமாக நெல்அறுவடை எந்திரம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பொங்கல் பண்டிகை முடிந்ததும் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சூரியா மதுவில் விஷத்தை கலந்து குடித்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சூரியா பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து செல்வராஜ் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்