750 மரக்கன்றுகளை நட்டு பொங்கலை கொண்டாடிய சுகாதாரத்துறையினர்
பெரம்பலூரில் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் பொங்கல் விழா துறைமங்கலத்தில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடந்தது.
பெரம்பலூர்,
பொங்கல் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களில் 750 மரக்கன்றுகள் நடும் பணியை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.