பொங்கல் பண்டிகைக்கு மகள்களுக்கு சீர் செய்ய முடியாத விரக்தியில் பெண் தற்கொலை

பொங்கல் பண்டிகைக்கு மகள்களுக்கு சீர் செய்ய முடியாத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-01-18 22:45 GMT
வாலாஜா, 

வாலாஜா அருகே ஒழுகூர் குப்பம் கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி தெய்வானை (வயது 54). இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகள்களுக்கு பொங்கல் சீர் செய்வதற்காக தெய்வானை தனது கணவரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜெயராமன் தற்போது பணம் இல்லை எனவும் பின்னர் சீர் செய்யலாம் என கூறி உள்ளார்.

இதனால் மனவருத்தத்துடன் இருந்த தெய்வானை நேற்று முன்தினம் வீட்டில் பயிர்களுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்