ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-05 23:15 GMT
ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரை அடுத்த முக்காணி ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவருடைய மனைவி ஆறுமுககனி (வயது 36). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ஆறுமுககனி நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அவருக்கு ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஆறுமுககனி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்