அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

நெல்லூர்பேட்டை அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2020-02-06 21:30 GMT
குடியாத்தம், 

குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர்.தயாளன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் புலவர் மணி, எம்.ஏ.கே.சீனிவாசன், நடிகர் வெங்கடேசன், சண்முகசெங்கல்வராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியை என்.திலகவதி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக டி.சி.எம்.எஸ். தலைவர் ஜெ.கே.என்.பழனி கலந்து கொண்டு 113 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமைஆசிரியை லட்சுமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்