5-வது மாடியில் இருந்து தவறிவிழுந்த பெண் என்ஜினீயர் பலி

5-வது மாடியில் இருந்து தவறிவிழுந்த கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-02-12 22:15 GMT
சென்னை,

சேலத்தைச் சேர்ந்தவர் அப்பாதுரை. இவருடைய மகள் ஊர்மிளா (வயது 25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர், திருப்போரூரை அடுத்த நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில், கடந்த 8 மாதமாக பணிபுரிந்து வந்தார்.

தவறிவிழுந்து பலி

நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உள்ள 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாழம்பூர் போலீசார், பலியான ஊர்மிளா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்