நெல்லையில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சுரேஷ் (வயது 23).

Update: 2020-02-28 21:30 GMT
நெல்லை, 

நெல்லை தச்சநல்லூர் சத்திரம் புதுக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் சுரேஷ் (வயது 23). கட்டிட தொழிலாளி. நெல்லை அருகே உள்ள தாழையூத்தில் வேன் விற்பனை செய்யும் கம்பெனி இயங்கி வருகிறது. 

அங்கு விற்பனைக்காக வெளி மாநிலத்தில் இருந்து வேன்கள் நேற்று முன்தினம் வந்தன. அந்த வேன்களை கம்பெனி ஊழியர்கள் இறக்கிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சுரேஷ், மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர், எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்