போச்சம்பள்ளி அருகே கோவிலில் பூட்டை உடைத்து திருட்டு

போச்சம்பள்ளி அருகே கோவிலில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2020-03-03 23:30 GMT
மத்தூர்,

போச்சம்பள்ளி அருகே எம்.ஜி.அள்ளி ஊராட்சி தாதனூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ திம்மராய சாமி கோவில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலின் பூசாரியாக கோவிந்தசாமி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலுக்குள் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் கோவிலில் இருந்த வெண்கல குத்து விளக்கு 2, தொங்கும் விளக்கு 1, சாமிக்கு சாத்தப்பட்ட பட்டு புடவைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கோவில் தர்மகர்த்தா கணேசன் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்