வெள்ளகோவில் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி

வெள்ளகோவில் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியானார்.

Update: 2020-03-05 22:15 GMT
வெள்ளகோவில்,

வெள்ளகோவில் சீரங்கராய கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் மாசாணி. இவருடைய மகன் ரஞ்சித் (வயது 18). இருசக்கர வாகன மெக்கானிக். 

இந்நிலையில் கடந்த 29-ந் தேதி இரவு 11 மணிக்கு ரஞ்சித் மோட்டார் சைக்கிளில் வெள்ளகோவில் அருகே காட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரஞ்சித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்