தாரமங்கலம் அருகே, விபத்தில் சேலம் சிறை வார்டன் பலி

தாரமங்கலம் அருகே, விபத்தில் சேலம் சிறை வார்டன் பலியானார்.

Update: 2020-03-15 22:15 GMT
தாரமங்கலம்,

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கிரண்ராஜ் (வயது 21). திருமணம் ஆகாதவர். சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சப்-ஜெயிலில் கிரண்ராஜ் வார்டனாக வேலைபார்த்து வந்தார்.

இந்தநிலையில் கிரண்ராஜ் கடந்த 12-ந்தேதி அமரகுந்தியில் உள்ள வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

விபத்தில் பலி

கே.ஆர்.தோப்பூர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் அருகில் வந்தபோது ரோட்டின் மத்தியில் உள்ள பேரிகாட்டில் (தடுப்பு) எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் கிரண்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கிரண்ராஜ் இறந்தார்.

இதுகுறித்து தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மயில்சாமி, ஆனந்தன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிறை வார்டன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்