கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு 31-ந் தேதி வரை விடுமுறை - துணைவேந்தர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக துணைவேந்தர் தாஸ் அறிவித்துள்ளார்.

Update: 2020-03-16 07:15 GMT
திருவாரூர், 

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூர் அருகே நீலக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்படுவதாகவும், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் தாஸ் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்