கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய 100 பொட்டலங்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது

ஈரோடு மண்டலத்தில் பணியாற்றும் கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய 100 பொட்டலங்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

Update: 2020-04-18 22:30 GMT
ஈரோடு, 

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நேரத்தில் பொருளாதார சிரமத்தால் குடும்பம் நடத்த கஷ்டப்படும் ஏழைகள், தினசரி கூலித்தொழிலாளர்களுக்கு, ஈரோடு மண்டலத்தில் பணியாற்றும் கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய 100 பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கனரா வங்கியின் ஈரோடு உதவி மண்டல மேலாளர் எம்.ஜி.ஜனார்த்தன ராவ் கலந்து கொண்டு, 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய 100 பொட்டலங்களை, மாவட்ட கலெக்டர் சி.கதிரவனிடம் வழங்கினார். மேலும் கனரா வங்கி சங்கத்தின் சார்பில், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள போலீசாருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கனரா வங்கி அதிகாரி சி.வேலுசாமி, முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் எஸ்.அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்