ஏரல் அருகே பரிதாபம்: மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

ஏரல் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-04-22 22:30 GMT
ஏரல், 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தெற்கு வாழவல்லான் குலாளர் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 85). இவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. தங்கவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில் முத்துலட்சுமி கடந்த சில நாட்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்