பழனி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர்

பழனி அருகே கிணற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவர்.

Update: 2020-04-28 00:52 GMT
கீரனூர்,

பழனி அருகே உள்ள கோரிக்கடவு கிராமத்தை சேர்ந்தவர் காத்தசாமி. இவருடைய மகன் கோவிந்தராஜ் (வயது 19). இவர் பழனி பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த அவர், நேற்று முன்தினம் காலை தனது கிணற்றுக்கு குளிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை கோரிக்கடவு அருகில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் கோவிந்தராஜ் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜ் கிணற்றில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்