முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் 810 குடும்பங்களுக்கு அரிசி - முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் 810 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அரிசி வழங்கினார்.

Update: 2020-04-30 22:30 GMT
சேவூர்,

முறியாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூலக்குரும்பபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கலந்து கொண்டு 810 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கினார்.

இதில் அவினாசி ஒன்றிய குழு தலைவர் அ.ஜெகதீசன், முறியாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ப.ரவிக்குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.கே.கனகராஜ், சேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு, சூர்யா கார்டன் கருப்பசாமி, ஏ.ஆர்.கே.கார்த்தி, அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு ஷாஜகான், பாண்டி, ஹரிகரன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்