தெலுங்கானாவில் இருந்து சின்னசேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,630 டன் அரிசி வந்தது

தெலுங்கானாவில் இருந்து சின்னசேலத்துக்கு சரக்கு ரெயிலில் 2,630 டன் அரிசி மூட்டைகள் நேற்று வந்தது.

Update: 2020-04-30 22:29 GMT
சின்னசேலம்,

கொரோனா நிவாரண திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு சார்பில் இந்திய உணவுக் கழகம் மூலம் தமிழகத்துக்கு சரக்கு ரெயிலில் அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் பகுதியில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் 52 ஆயிரத்து 900 மூட்டை (2,630 டன்) புழுங்கல் அரிசி நேற்று சின்னசேலம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

அவற்றை சரக்கு ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி சின்னசேலம் கூகையூர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்று இறக்கி வைத்தனர். இவை அனைத்தும் கொரோனா நிவாரணத் திட்டத்தின் கீழ் பொது விநியோக திட்ட குடும்ப அட்டைதாரர் களுக்கு வழங்குவதற்காக கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு

சரக்கு ரெயிலில் இருந்து அரிசி மூட்டைகளை இறக்கி சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்கும் பணியை இந்திய உணவுக் கழக மேலாளர் வெங்கடாஜலம், உதவியாளர் திருநீலகண்டன், சேமிப்பு கிடங்கு மேலாளர் பழனியப்பன், ரெயில் நிலைய அதிகாரி சவுத்ரி ஆகியோர் பார்வையிட்டனர்.

இதையொட்டி அங்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்