விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது

உத்தனப்பள்ளி அருகே விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-05-21 00:10 GMT
ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 33). விவசாயி. இவர் கடந்த 13-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நடந்து சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேர் கைது செய்தனர். 

இந்தநிலையில் விவசாயி கொலை வழக்கில் அனுமந்தபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மாணவரை நேற்று கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்