தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 123 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தர்மபுரி,
நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி தேவையின்றி வாகனங்களில் சென்ற 123 பேரை போலீசார் கைது செய்தனர். 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.