புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-05-29 23:01 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் 40பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 4 பேருக்கு புதிதாககொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருந்ததை யொட்டி அவர் மூலம் மற்றவர்களுக்கும் இந்த தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது.

புதுவை பிராந்தியத்தில் மட்டுமே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 6,917 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 21 பேருக்கு மட்டும் முடிவு வரவேண்டி உள்ளது.

மாகி, லாஸ்பேட்டை, அரும்பார்த்தபுரம், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர் வீதம் 8 பேரும், நெட்டப்பாக்கத்தில் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 35 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் செய்திகள்