கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது
கிராம நிர்வாக அலுவலரை திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த தீவனூரை சேர்ந்தவர் திருமால் பிள்ளை மகன் ஏழுமலை (வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் டிராக்டரை நிறுத்தி இருந்தார்.
இதை அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், ஏன் டிராக்டரை இங்கு நிறுத்தி உள்ளாய் என்று கேட்டார்.
இதில் கோபமடைந்த ஏழுமலை, சுதாகரை ஆபாசமாக திட்டினார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.