இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தென்காசி ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி,
ரெயில்வே துறையை தனியாருக்கு விற்கக் கூடாது என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தென்காசி ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கண்ணன், வெங்கடேஷ், ராமமூர்த்தி, பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.