உத்தமபாளையம் அருகே, கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

உத்தமபாளையம் அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.

Update: 2020-07-27 07:11 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (20). ஆட்டோ டிரைவரான இவருக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக் காதல் விவகாரம் முத்துலட்சுமியின் கணவர் சசிகுமார் மற்றும் உறவினர் களுக்கு தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் அழைத்து உறவினர்கள் கண்டித்தனர். இருப்பினும் 2 பேரும் கள்ளக் காதலை கைவிடவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை அஜித்குமார் முத்துலட்சுமியின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். இதையடுத்து 2 பேரும் தனிமையில் சந்தித்து பேசினர். அப்போது சேர்ந்து வாழ முடியாததால் இருவரும் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த 2 பேரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் கள் 2 பேரும் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த 2 பேரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்