தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதில் முறைகேடு; கலெக்டரிடம் புகார்

தூய்மை இந்தியா திட்டத்தில் கழிவறை கட்டுவதில் முறைகேடு; கலெக்டரிடம் புகார்.

Update: 2020-08-05 21:49 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சியை சேர்ந்த 14 பேர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிசிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் நெடுங்குன்றம் ஊராட்சியில் வசித்து வருகிறோம். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிவறை கட்டுவதற்கு எங்களது பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தனிநபர் கழிவறை திட்டத்தில் உள்ள பயனாளிகள் பட்டியலை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் எங்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இது நாள் வரையிலும் தனிநபர் கழிவறை கட்ட ரூ.12 ஆயிரம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் நெடுங்குன்றம் ஊராட்சியில் தனிநபர் கழிவறை கட்டுவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுங்குன்றம் ஊராட்சியில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்