வாலாஜாபாத் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் மர்மச்சாவு

வாலாஜாபாத் அருகே ஆடு மேய்க்க சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2020-09-04 21:41 GMT
வாலாஜாபாத்,

வாலாஜாபாத்தை அடுத்த தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 50). திருமணம் ஆகாதவர். இவர் ஆடுகளை மேய்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றார். மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்தன.

சாந்தி வீட்டுக்கு வரவில்லை. அவருடைய உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்று காலை ஏகனாம்பேட்டை ஆற்றங்கரை பகுதியில் உள்ள புதர் அருகே சாந்தி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வாலாஜாபாத் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்