செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் 324 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

Update: 2020-09-15 23:45 GMT
வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் பாளையத்தம் கோவில் தெருவில் வசிக்கும் 65 வயது முதியவர், கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண், மகாலட்சுமி நகரை சேர்ந்த 29 வயது வாலிபர், வண்டலூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் 66 வயது முதியவர், 22 வயது இளம்பெண், 32 வயது ஆண் உள்பட 34 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கூடலூர் அஷ்டலட்சுமி நகரில் வசிக்கும் 34 வயது ஆண், கலைவாணர் தெருவை சேர்ந்த 43 வயது ஆண், பனங்காட்டூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 20 வயது வாலிபர் உள்பட 12 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 4 பேர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 67 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 28 ஆயிரத்து 457 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 491 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 119 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் செய்திகள்