காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 198 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-15 23:00 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 23 வயது ஆண் 26, 50 வயது பெண், 30 வயது ஆண், 29 வயது ஆண் சோமங்கலம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களையும் சேர்த்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 198 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 19 ஆயிரத்து 768 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 ஆயிரத்து 170 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,310 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 288 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்