கரூர் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா

கரூர் மாவட்டத்தில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-25 02:03 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி புலியூரை சேர்ந்த 39 வயது பெண், துரைசாமிபுரத்தை சேர்ந்த 80 வயது முதியவர், அரவக்குறிச்சியை சேர்ந்த 54 வயது ஆண்.

ஆண்டாங்கோவிலை சேர்ந்த 75 வயது மூதாட்டி, காந்திகிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர், 80 வயது மூதாட்டி, சின்னமூக்கனாங்குறிச்சியை சேர்ந்த 23 வயது பெண், காமராஜபுரத்தை சேர்ந்த 58 வயது ஆண், வீரராக்கியத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டி, எம்.புதூரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த 75 வயது முதியவர், பசுபதிபாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண்.

வேலாயுதம்பாளையம்

80 வயது முதியவர், கடவூரை சேர்ந்த 65 வயது முதியவர், 37 வயது ஆண், க.பரமத்தியை சேர்ந்த 61 வயது ஆண், 53 வயது ஆண், அம்மன்நகரை சேர்ந்த 66 வயது ஆண், தாந்தோன்றிமலையை சேர்ந்த 62 வயது முதியவர், ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த 79 வயது முதியவர், மண்மங்கலத்தை சேர்ந்த 45 வயது பெண், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 35 வயது ஆண் உள்பட 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்