சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 296 பேர் பாதிப்பு 5 பேர் பலி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2020-09-27 16:25 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 297 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 296 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 173 பேர், காடையாம்பட்டியில் 11 பேர், கொங்கணாபுரத்தில் 2 பேர், மகுடஞ்சாவடியில் 4 பேர், ஓமலூரில் 26 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 14 பேர், சங்ககிரியில் 7 பேர், வீரபாண்டியில் 10 பேர், ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், பனமரத்துப்பட்டியில் 9 பேர், வாழப்பாடியில் 3 பேர், மேட்டூர் நகராட்சியில் 11 பேர், எடப்பாடி நகராட்சியில் 2 பேர் மற்றும் மேச்சேரி, எடப்பாடி, தாரமங்கலம், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

213 பேர் டிஸ்சார்ஜ்

மேலும் நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 3 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 18 ஆயிரத்து 304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 213 பேர் குணம் அடைந்து விட்டதால் அவர்கள் அனைவரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும், தொளசம்பட்டியை சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவரும், அம்மாபேட்டையை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவரும் என 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 2 ஆண்கள் உயிரிழந்தனர். இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 304 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்