ஈரோட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-10-01 00:11 GMT
ஈரோடு,

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் திராவிடர் பேரவை தலைவர் மாசிலாமணி, நீரோடை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிலவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்