நாமக்கல்லில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல்லில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-10-05 05:51 GMT
நாமக்கல்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பாலகிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 21). இவர் நாமக்கல் நாகராஜபுரத்தில் உள்ள சித்தப்பா ரவி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார்.

இவருக்கு வயிற்று வலி அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 30-ந் தேதி வயிற்று வலி தாங்க முடியாத அவர் விஷம் குடித்து விட்டார்.

உயிருக்கு போராடிய அவரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்